செவ்வாய், 19 ஏப்ரல், 2011

முகவரித்தேடல்

என்
குருதித்துணிக்கைகளில் புகுந்து
இதயத்தில் குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறாய்
கனவுகள்
கண்ணீரில் மூர்ச்சையானபோதும்
நிழலும் உன்னிடம் வருவதற்கு
அடம்பிடிக்கிறது
சோகங்கள்
தந்துதூரமாகிப்போகும்
உன்
முகவரிதான்
கவிதை எழுதச்செய்கிறது
பலருடன்
உன்னைப்பற்றிப்பேசினேன்
ஒருதுளிவார்த்தையேனும்
உன்னிடம் சொல்லவில்லையே
அன்பே.....
நான் உன்னில் பிடிவாதமாய்
இருப்பதே உன்னில் பித்தனாயிருப்பதால்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக