புதன், 20 ஏப்ரல், 2011

ஏக்கங்கள்

என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத ஜனநாயகவாதிகள்
கண்ணீரை சொந்தமாக்கி
கல்லறையில் சமாதியானவர்கள்
கணக்கிட்டால் பல லட்சம்...


சொத்துக்களை இழந்து
 சொந்தங்களைதொலைத்து
சோற்றுக்கு வழியேது-சொல்லப்போனால்
சோர்ந்துபோனது எம் உள்ளமும்தான்
இருப்பதற்கு வீடேது
இளைப்பாற இருக்கையேது
மரநிழலில் வாழ்கிறோம்


மரண அச்சுருத்தலும்
மரணஓலங்களும்
மண்ணில்நிரந்தர சோகங்கள்தான்
விருவிருப்பாய் வீசப்படும் செல்வீச்சுக்களும்
சவக்குழியே ஞாபகப்படுத்துகிறது
என்றைக்கு
எப்போது
எதிர்வு கூறமுடியாத இன்றைய நிலை........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக