புதன், 20 ஏப்ரல், 2011

தொலைந்தநிம்மதி

நிஜங்கள்
பறிக்கப்பட்டு
பொம்மைகளாய்
நடமாடுகிறது-மனிதம்


பொருளாதாரம்
முதலாளித்துவம் பேசி
ஏழைகளுக்கு
வழங்குகிறது-மரணப்பரிசு


காலம்
பிரபஞ்சத்தை கடத்திச்செல்ல
நிர்வாண அசிங்கமாகிறது
கலாசாரம்



நிம்மதி 
தொலைந்த உறவில்
விம்மி அழுது போகிறது
பெண்ணியம்


யுத்தம்
முடிந்தும் சுதந்திரம்
இல்லாத மனிதர்களாய்
இங்கு-தமிழினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக