புதன், 20 ஏப்ரல், 2011

கிடைக்காத விடிவு

வெந்துபோகும்
வாழ்க்கையில் பணம்
வேசம் போட்டு
நாடகமாடுகிறது........


ஈரமில்லாத
மனங்களில் ஜனநாயகம்
தோற்கடிக்கப்பட்டு
நெஞ்சுவர்களில் மட்டும்
சுலோகமாயிருக்கிறது...


நிம்மதியை
தொலைத்த
அகதிப்பிஞ்சுகளின் கல்வியும்
கொடுக்கமுடியாத
கடனாகிப்போனது......


தாயையே
முதியோர் இல்லத்துக்கு
அனுப்பும் பிரபஞ்சத்தில்
அன்பும் அநாதையாகிப்போனது...


சரித்திரங்களை

படைத்திடும் மனிதர் நடுவே
ஏனோ சாதி மட்டும்
தூரநிற்கிறது...


கடவுளே
மரணத்தை விட
கொடுமையானது
மனித மனங்கள்,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக