ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கண்ணீர்க்கணங்கள்

நெருப்பில்
வேகின்றது வறுமைஉணர்வுகள்
கூடவே வடிகட்டிஎடுக்கப்படுகிறது
வம்சச்சாம்பாரில் ஏழையின் கண்ணீர்

பணம்
மனத்தை மணமுடித்து
சவக்குழிகளுக்கு அலங்காரம்
செய்கிறது

ஒப்பாரி ராகத்தில்
சந்தோசத்தை காணத்துடித்து
தமிழனின் தலைவிதி
மாறிப்போனது

முதலாளித்துவம்
பிரபஞ்சத்தை விலைக்குபேசி
அடக்குமுறையை திணிக்க முயலுகிறது

பொம்மை
கலாசாரத்தில் பெண்ணியம் அடிபணிந்து
விற்பனையாகிறது
இருந்தும்
தொடரும் தவிப்புக்களில்
அழுது புலம்புகிறது
மனித மனங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக