புதன், 20 ஏப்ரல், 2011

நிறைவேறாத ஆசை

மாறிக்கொள்ள
 முடியாமல்போனது
வறுமையின் மறுபதிப்புக்கள் 



மனதில்
மறைந்துபோகாமல்
மெளன அஞ்சலி பிரார்த்தனை
இடம்பெறுகிறது
சமாதானத்தை பெற்றெடுப்பதற்கென்று


சாவுடன்
இங்கு ஆவிகள்
உரையாடல் செய்கிறது
ஆர்ப்பாட்டம் புரிய இங்கு
ஆட்கள் இல்லையென்று


இடப்பெயர்வுகள்
அகதிவருகை
நிவாரணவரிசை மிளவும்
எம் வீதிகளில் தொகுப்பிக்கப்படுகிறது


எமக்கு
சமாதானகாற்றை அரவணைக்க
முடியவில்லையே மனிதனாக பிறந்தும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக